Friday, 26 February 2016

உதிர வேட்டை

இக்கவிதையை நான் என் விடுதி நாட்களில் எழுதியது. அச்சமயம் நான் ரத்தான அமைப்பாளர்ராக செயல்பட்ட அனுபவம் இக்கவிதையின் கருவானாது.

சிந்தனை கடலில் சிறப்பாய்
தத்தளிக்கும் கனவின் தருணத்தில்
அவசர மணி அழைத்திட

தொல்லையாய் எண்ணிய தொலைபேசியில்
புதுவரவாய் அறியா புது எண்கள்
முதல் பேச்சே முழுமையற்றதாய்
உள்ளம் பதைபதைக்க உறவுக்காக

பதட்டம் தொண்டையில் பரபரப்பாய்
அரிய வகை இரத்தத்தை அவசரமாய் சொல்ல
தூக்கம் கலைந்து துடிப்புடன்
எண்ண ஓட்டங்கள் எழுச்சியடைய

தகவல் பறந்தது தன்னார்வாளர்களுக்கு
அழைப்புகள் பலருக்கு விரைந்தன்
சிலர் நோயென்று சிரித்தார்கள்
பயம் என்று பதுங்கினார்கள்

கரையும் பொன்னான காலம்
கதவுகள் தட்டும் கரங்கள்
நிதமாய் விவரி நிலைமையை
முழுமையான தேடல் முடக்கி விடப்படும்.

இறைவன் அனுப்பிய இளைஞன்
அடையாளமிட்டு இரத்தத்திற்காக அணுக
சம்மதம் என்றாலும் சம்பிரதாயமிருக்க
கேட்கப்படும் பல கேள்விகளுக்கு

தரமான பதில்கள் தரப்பட்டால்
உதிரம் கொண்டு உதவிட
அவன் உடல் ஆரோக்கியம்
உதவிக்கு ஒருவனோடு உடனடியாக
பயணம் தொடங்கும் பாதுகாப்பாக


அனைத்தும் முடியும் அரைமணியில்
சற்று நேரம் சாய்வாய்
ஒய்வறையில் ஒதுங்க
மீண்டும் ஒர் அழைப்பு.


                                - ஹமீத் முஹம்மது ரிஸ்வான்

Thursday, 11 February 2016

மாய உலகில் எங்கே அவர்கள். . ?


 
                                                       

­
கருப்பு சாயம் வெளுக்கத் துவங்கிய நேரம்
காலைப் பணி மெல்ல விலகிட கண்டேன்
காகம் கரைந்திட; குயில் கானம் பாடிட
காலைப் பனியின் இனிமை என்னைச் சார

இளமையான இந்த காலைப் பொழுது
இழுத்துச் சென்றது இதமாய் இமைகளுக்குள்
இமைகள் மூட இருட்டை உணர்ந்தேன்
இன்றும் மறக்காத அந்த நாட்களின் வெளிச்சத்தை

துள்ளி ஓடிய தெருக்கள் எங்கே.?
துள்ளும் மீன்களிருந்த குளங்கள் எங்கே.?
தூங்கிய மரத்தடிகள்; மைதானங்கள் எங்கே.?
தூங்குகின்றனவோ.? அவை கட்டிடங்களுக்கு அடியில்.!


கால் வயிற்றுக் கஞ்சி தான்
கடவுள் கொடுத்த வரம்
கஞ்சியிலும் காகத்திற்கு பங்கு வைத்த
கால் உடை அனிந்த மனிதன் எங்கே.?

தான் பெற்ற பிள்ளைகள்
தன்னை தனிமையில் விட்டாலும்
தன்னை சுற்றியுள்ள பிள்ளைகளை
தன் பிள்ளை என்ற கிழவி எங்கே போயிற்றாள்.?

அடிபட்ட குருவியை மெல்ல எடுத்து
அதற்கு மருந்திட்டு உணவளித்து
அது குணமானவுடன் கொஞ்சித் தழுவி
அழகாய் பறக்க விட்ட அவன் எங்கே.?

முற்றத்தில் பேசும் பெண்கள்
முன்டியடித்து ஒடும் குழந்தைகள்
 முனங்கிக் கிடக்கும் பெரியவர்கள்
முழுவதுமாய் தொலைந்திட்டனரோ.?

பலகாயிட்டு சமைத்த உணவை விட
பச்சை மிளகாயுடன் கூடிய கஞ்சி
பாசத்துடன் நினைக்கிறது என் நாக்கு
பார்ப்போமா அந்த வெள்ளை மனதுக் காரனை என்று.


ஊழல் பெருகியது வாழ்க்கையில்
உணவுக்கு ஏக்கம் கொண்டது வயிறு
உலகம் வாழ்வதற்கு ஏற்றதா.?
உண்மையில் சந்தேகமே நம்பிக்கையற்றவர்களுக்கு.

வெறிச்சோடியிருந்த மருத்துவமனைகள்
பெருங்கோடிகளுக்கு சொந்தங்களாகின்றன
கொலை செய்யப்பட்டான் விவசாயி
கொலையாளி நிச்சயமாய் மரம் வெட்டுபவனே.

நான் தனித்தே இருந்தேன் எண்ணங்களுடன்
நாளைய உலகை எதிர் நோக்குவனாக
நன்றாய் இன்றைய நாளை அனுபவித்தவனாக
நம்பிக்கையுடன் தனித்திருக்கிறேன் நான். 


-      அ. ஹமீத் முஹம்மது ரிஸ்வான்.
இரண்டாம் ஆண்டு, MCA,
ஜமால் முஹம்மது கல்லூரி,
திருச்சி.




Tuesday, 2 February 2016

உதிர வேட்டை

உதிர வேட்டை என்கிற என் கவிதையை படிக்க இந்த லின்க் கை கிளிக் செய்யவும்

https://medium.com/@hameedriswan/33584fadcfda
This Blog was constructed and maintainance by A. Hameed Mohamed Riswan. MCA., MDTP.